ஐப்பானின் ஆரம்பக் கல்வி

ஐப்பானிய பிள்ளைகள் ஆறு வயதில் ஆரம்பக் கலவிப் பாடசாலைகளுக்குச் செல்கின்றன. ஆரம்பக் கல்விக்கான கலைத்திட்டத்தில் ஜப்பானிய மொழி, கணிதம், சமூகக்கல்வி, சங்கீதம் கைவேலை, உடற்கல்வி மற்றும் மனைப் பொருளியல் (சாதாரண சமையல் மற்றும் தைக்கும் நிறள்கள்) என்பன உள்ளடக்கப்பட்டுள்ளது. அதிகளவான ஐப்பானிய ஆரம்பப் பாடசாலைகளில் ஆங்கில மொழியினை கற்பிக்கத் தொடங்குவதோடு ஊட்டச்சத்து மிக்க மதிய உணவையும் வழங்குவதாகக் காணப்படுகின்றன. மாணவர்களை உள்ளடக்கிய சிறு குழுக்கள் தங்களுடைய ஈம வகுப்பும் பிள்ளைகளுக்கு மதிய 60016060 பரிமாறுகின்றனர். வாழ்க்கைக்கான நேர்ச்சிகளையும் நல்ல பழக்கவழக்கங்களைப் பழக்குவதற்காகவும் ஆரம்ப வகுப்புப் பிள்ளைகள் தங்களின் வகுப்பறைகளையும் சூழற் பகுதிகளையும் தாமே துப்பரவு செய்வதற்கும் அனுமதிக்கப்படுகின்றனர்.

இடைநிலைக் கல்வியின் பிரதான சிறப்பியல்புகள்

உருவப்படம் தரப்பட்ட ஜப்பானியக்கல்விக் கட்டமைப்பினைப் பரிசீலனை செய்க, இவ்வமைப்பில் ஆலுவகைப் பாடசாலைகளும் Дулебавань இடம்பெற்றுள்ளன என்பதைக் கவனிக்க, இடைநிலைப் பின்கல்லி நிலையங்களும் (Miscellaneous Schools)

இடைநிலைக்கல்வி தொழில் தேவைகளின் இணைப்பு

மேற்குறித்த பலவகைப்பட்ட பாடசாலைகளில் மேல்மட்ட இடைநிலைப் பாட்சாலைகள் சிறப்பும் கவனம் பெறும் தகைமை உள்ளனவாம். கல்வியூட்டும் வழியின் அடிப்படையில் திம்மேல்மட் இடைநிலைப் பாட்சாலைகள் மூன்று வகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை முழுநேரம் அல்லது பகுதிநேரம் அல்லது அஞ்சல் முறை என்னும் வழிகளில் கல்வியூட்டும் பாடசாலைகள் ஆகும். அவற்றைக் கலைத்திட்டங்களின் அடிப்படையில் பொதுப்பாடசாலைகள் எனவும் மற்றொரு முறையிற் பகுக்கலாம்.

பொதுக்கலைத்திட்டம் நூற்கல்வி/ஏட்டுக் கல்விப்பாடங்களுக்கு அழுத்தம் கொடுக்கின்றது. இவற்றில் சில கட்டாயபாடங்கள் ஆகும். பொதுக்கல்விக்குரிய பாடங்களும் அப்பாடம் ஒவ்வொன்றுக்குமுரிய மதிப்பு அளவெண்களும் இவ்வட்டவணை ஒன்றில் தரப்பட்டுள்ளன. ஒரு கற்கை நெறியைப் பூர்த்தி செய்ய மாணவர் ஒருவர் 30 அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்பெண்களை ஈட்டிக்கொள்ள வேண்டும் கட்டாய பாடங்களில் ஜப்பானியமொழி சமகாலச் சமூகம், கணிதம் 1 விஞ்ஞானம், உடற்கல்வி, உடல்நலம், இசை!, நுண்கலைகள். கைப்பணிகள்,எழுத்தணிக்கலைகள்! என்பன இடம்பெறுகின்றன. அத்தியாவசியத்துறைகள் அனைத்திலும் பரந்த அத்திவாரத்தை அமைக்க இந்தப் பாடத் தொகுதி உதவுகின்றது என்பதை கவனத்திற்கொள்ளவும்.

மேலும் மாணவர்களின் சிறப்பு மனப்பாங்குகள், அறிறல்களின் விருத்திக்கும் அவர்கள் தமது எதிர்கால நலன்களுக்கு ஏற்பர் செய்ய விரும்பும் தெரிவிற்கும் உரிய பிரமிப்பூட்டும் பாடஅணி தெரிவுப் பாடங்கள் என இடம்பெறுவதை அறிந்துகொள்ளலாம்.

பாடசாலை முகாமையில் மாணவர்களுக்கு வழங்கப்படும் முக்கியத்துவம் ஜப்பானியக் முறைமையின் குறிப்பிடத்தக்க அம்சமாகும். வரவுப்பதிவேடுகளில் வரவுப்பதிவு வகுப்பறைகளையும் கட்டிடங்களையும் சுத்தம் செய்தல், பாடசாலை உணவுப்பங்மீட்டு தொலைபேசித் துறையில் உள்வாரி இயக்கப்பணி, பாடசாலைக் கட்டொழுங்கு ஒழுக்கம் என்பவற்றின் விருத்தியும் அமுலாக்கமும் விளையாட்டுப்போட்டி, பாடசாலை மன்றங்கள் சங்கங்களின் பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களின் திட்டவரைவும் அமுலும் எளியன் மாணவர்களின் பொறுப்பில் ஒப்படைக்கப்படும் செயற்பாடுகள் ஆகும், இச்செயற்பாடுகளில் மாணவர்கள் பங்குபற்றுதல் மூலம் எதிர்காலக் குடிமைப் பண்புகளை உருவாக்கவும் வேலை வழங்குவோரை மதிக்கும் பொதுத் திறள்களை விருத்தி செய்யவும் இயலும்

சிறப்புத்துறைப் பள்ளிகள் வேளாண்மை உற்பத்தித் தொழில் வணிக முயற்சிகள், மீன்பிடிக்கலை மனைப்பொருளியல், நோய்ப்பராமரிப்பு: விஞ்ஞானம், கணிதம், இசை, நுண்கலை என்னும் துறைகளில் கற்கை நெறிகளை வழங்குகின்றன. இப்பாடசாலைகள் தமது எதிர்கால வாழ்க்கை தொழிலாக ஒரு குறிப்பிட்ட தொழிற்துறையைத் தெரிவுசெய்த மாணவர்களுக்குரிய தொழில்சார். தொழில்நுட்பம்சார் கற்கை நெறிகளை வழங்குகின்றன. மே 1995இல் மேல்மட்ட இடைநிலைப் பாடசாலை மாணவர்களில் 28.5% விழுக்காட்டினர் சிறப்புத் துறைப்பயிற்சி உயர் பாடசாலைகளில் பயின்றனர். இவற்றின் கற்கை நெறிகள் சிறப்புப் பயிற்சி வழங்குவள ஆகும். உதாரணமாக உற்பத்தித்தொழில் தொடர்புள்ள சுற்கைநெறிகளில் (1996) இடம்பெறும் 74 பாடங்களில் கட்டிட நிருமாணக் கட்டமைப்பு, தொடர்பாடல், தொழிற்கலைநுட்பம், நிலஅளவீடு, நிரோட்டவியல், (ஸ்நீரியல்), இரசாயனப் பொருளியல், மட்பாண்டத் தொழிற்கலைநுட்பம், துணித்தொழிற்கலைநுட்பம். கோலவரைவு நுணுக்கங்கள் உற்பத்தித்துறை முகாமைக்கலை நுட்பம் என்னும் பாடங்கள் அடங்குகின்றன. இவை தொடர்பாக செய்முறை வேலைக்கே அதிக நேரம் செலவிடப்படுகிறது.

“பல் பயிற்சிப் பள்ளிகள் (Miscellaneous) என்பன ஆடைத் தொழில், உணவு வழங்கல் தொழில் கணக்குப் பதிவுத்தொழில், தட்டச்சுத்தொழில், சாரதித்தொழில், பழுது திருத்தற் தொழில் கம்பியூட்டர்/கணனித்தொழிற்கலை நுட்பம் என்பவற்றில் தொழில்சார். செய்முறைசார் சுற்கை நெறிகளை வழங்குகின்றன. இக்கற்கை நெறிகளில் பெரும்பாலானவைற்றைப் பயில கீழ்மட்ட இடைநிலைக் கல்வியைப் பூர்த்திசெய்தல் அவசியம் ஆகும். ஏனையவற்றைப்பயில மேல்மட்ட இடைநிலைக்கல்விப் பூர்நதி நிபந்தனையாக விதிக்கப்படுகின்றது. ஜப்பானிய இடைநிலைக்கல்வி முறைமை பன்முகப்பண்புள்ளத/பல்சீர தன்மை கொண்டது என்பதையும் கீழ்மட்ட/மேல்மட்ட இடைக்கல்வியைப் பூர்த்திசெய்த மாணவர்களை அவர்களின் திறமை இயற்கை ஆற்றல்/சாமர்த்தியம், ஆர்வங்கள் என்பவற்றிக்கு ஏற்ப பல்வேறுவகையான பாடசாலைக்கு

நெறிப்படுத்துகின்றது. என்பதையும் நீங்கள் இப்போது கவளத்திற் கொண்டிருப்பீர்கள் 70% விழுக்காட்டினரான மாணவர்கள் மேல்மட்டப் பொது இடைநிலைக்கல்வி பயிலப் பாடசாலைகளில் சேர்கின்றார்கள் ஆனால் இப்பன்முகப்பண்பு/பல்சீரதன்மை என்னும் சிறப்பியல்பு நாட்டின்பொருளாதார நிருவாகத்தின் வேறுபட்ட தேவைகளை நிறைவு செய்யும் வகையில் சிறப்புத்திறன்களுக்குப் பயிற்சியளிக்க ஜப்பானுக்கு உதவுகின்றது.

இடைநிலைக் கல்வித் துறையில் உள்ள பிரச்சினைகள்

பெருவேறுபாடுகள் கொண்ட இருநாடுகளான ஜப்பானும் இலங்கையும் கவலைதரும், ஒரேவகைக் கல்விப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றன என்பது கவனத்தைக் கவரும் விடயம் என்பது. குறிப்பிடத்தக்கது.

இத்தகைய பிரச்சினைகளில் ஒன்று புகழ்மதிப்புள்ள பாடசாலைகளின் அனுமதிக்கான போட்டியாகும். மேல்மட்ட இடைநிலைப் பாடசாலைகளில் மாணவர்களை அனுமதித்தல் தொடர்பான ஒழுங்கு விதிகளும், தேர்ச்சித்தரங்களும்நியமங்களும் பல்வேறு கல்விச் சபைகளால்

உருவாக்கப்பட்டுள்ளன. மூவகைத் தகைமைகள் இச்சந்தர்ப்பத்தில் பரிசீலனை செய்யப்படுகின்றன.

1. ஆயனாப்பரீசீலலை- கீழ்மட்ட இடைநிலைப் பாடசாலை அதிபர் வழங்கிய சான்றிதழ்கள் உடல்நலப் பதிவேடு, பிள்ளையின் ஆளுமை பற்றிய மதிப்பீடு

2. வரவுப் பதிவேடுகள். நுண்ணறிவு தொடர்பான பதிவேடுகள் இணைப் பாடவிதான செயற்பாடுகளிற் பங்கு பற்றல் தொடர்பான பதிவேடுகள் போன்றவை.

3. நுழைவு அனுமதித்தேர்வில் மாணவரின் அடைவு.

4. வதிவிடம்: மகாண கல்விச்சபைகள் தமது நிருவாகத்துக்குள் அடங்கும் வரவு வலயங்களாகப் பிரித்துள்ளன. மேல்மட்ட இடைநிலைப் பாடசாலை ஒன்றில் அனுமதி பெறும் மாணவர்கள் குறிப்பிட்ட வலயத்திலுள்ள பாடசாலையில் அனுமதி பெறமட்டும் விண்ணப்பிக்க முடியும்.

இரண்டாவது பிரச்சினை மேல்மட்ட இடைநிலைக் கல்வித்துறையில் காணப்படும் தீவிர தேர்வாநிக்கம் ஆகும். இது புகழ்மதிப்பபுள்ள தொழிற்பள்ளிகளிலும் பல்கலைக்கழங்களிலும் அனுமதிபெற நிலவும் கடும்போட்டியின் விளைவேயாகும். தேர்வுகளில் கிடைக்கும் வெற்றியில் தமது சொந்த வாழ்வின் எதிர்கால வாய்ப்புக்கள் தங்கியுள்ளனவெனப் பிள்ளைகள் (அவர்களின் பெற்றோர்களும்) நம்புகின்றனர். அதனால் இலங்கையில் உள்ளது போலவே ஜப்பானிலும் பெற்றோர் புகழ்மதிப்புள்ள பாடசாலைக்கு அணிமையில் வாடகை வீட்டில் அல்லது விலைக்கு வாங்கிய வீடுகளில் வசிக்கத் தூண்டப்படுகின்றார்கள். மேலும் அவர்கள் “ஜுக்கு” என்று கூறப்படும் தனியார் வகுப்புக்களில் பிள்ளைகளைச் சேர்க்கின்றனர். இத் தனியார் வகுப்புக்கள் பரந்த அளவில் நாடு முழுவதும் செயற்படுகின்றன. மேல்மட்ட இடைநிலைப் பாடசாலை அனுமதிக்குரிய தேர்வுகளுக்குத் தோற்றவேண்டிய நிலைமை ஏற்படும்போது சுமார் 25% விழுக்காட்டினரான மாணவர்கள் தனியார் வகுப்புக்களுக்குச்செல்வதாக ஆய்வுகள் புலப்படுத்துகின்றன. மேலும் தாங்கள் விரும்பும் புகழ்மதிப்புள்ள பாடசாலையில் அனுமதிபெறும் தகைமையை சட்டிக்கொள்வதற்காகப் பெருந்தொலை மாணவர்கள் தாம் படிக்கும் அதே வகுப்பில் இன்னொரு வருடம் படிப்பது உசிதமென் நினைப்பார்கள் இப்பிரச்சினைக்குத் நிரவுகாண ஜப்பான் பின்வரும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

1. கல்வி முறைமையிலுள்ள பாடசாலைகளிடையே காணப்படும் ஏற்றதாழ்வுகளைக் குறைத்தல்.

2. அனுமதிப் பரீட்சைகளோடு பிறமதிப்பீடுகளைப் பயன்படுத்துதல். (உ-ம் அதிபர்களின் அறிக்கை)

௩. அனுமதிப் பரீட்சைக்குரிய பாடத்துறைகளின் எண்ணிக்கையைக் குறைத்தல்.

இரண்டாம் நிலைக்கல்வி சமகாலப் பிரச்சினைகளும் எடுக்கப்பட்ட தீர்வுகளும்

ஐப்பானிய கல்வி முறையில் ஒவ்வொரு 10 வருடங்களிலும் பரந்தளவான மாற்றங்கள் ஏற்படுத்தப்படும். சமகால தேசிய கலைத்திட்டத்திற்கான அறிவுறுத்தல்கள் 2002 ஆம் ஆண்டு இணைத்துக்கொள்ளப்பட்டதாகும். முதற்படியாக ஐப்பானிய பிள்ளைகள் தங்களுடைய நேரத்தில் அதிகளவான நேரத்தை கற்றலுக்காக செலவு செய்வதாகவும், பெற்றார்கள் தமது பிள்ளைகளின் கல்வியில் கவனத்தை அதிகரித்து செல்வதாகவும், கல்வியில் செலவு செய்யும் மொத்தப் பளணத்தின் அளவு கூடிக்கொண்டே செல்வதாகவும் விமர்சிக்கப்பட்டது. இதனால் இதன் சுமை உணரப்பட்டு மொத்த LITLANT6000 நேரம் குறைக்கப்பட்டதோடு கலைத்திட்டமும் மறுசீரமைக்கப்பட்டது. கடினமான பாட அலகுகள் பல உயர் வகுப்புகளுக்கு மாற்றப்பட்டன.

இரண்டாம் நிலைக் கல்வி தொடர்பாக உள்ள சமகால விமர்சனம் என்னவெனில் ஐப்பானிய பிள்ளைகள் போதுமான அளவு நேரத்தை கற்றலுக்காக செலவு செய்வதில்லை என்பதாகும். ஐப்பானின் பிறப்பு வீதம் குறைந்துவிட்டதோடு சிறந்த பாடசாலைகளுக்குள் நுழைவதற்கான போட்டி இலகுவாக்கப்பட்டது. அவதானிக்கக் கூடியளவிற்கு மாணவர்களின் கல்வி அடைவில் வீழ்ச்சி ஏற்படத் தொடங்கியது. சர்வதேச ரீதியிலான புலமைமட்ட அடைவுகள் தொடர்பான தரப்படுத்தலில் ஐப்பானின் நிலை வருடாவருடம் வீழ்ச்சியடையத் தொடங்கியது இந்த குறிப்பிட்டுக் காட்டக்கூடிய வீழ்ச்சி கல்வியிலும் கல்வி அமைச்சிலும் ஒரு நெருக்கடி நிலையை உடனடியாக உருவாக்கியது. 2007 ஆம் ஆண்டில் கலாசாரம், விளையாட்டு, விஞ்ஞானமும் தொழில் நுட்பமும் போன்றவற்றின் அடைவில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. தேசிய அடைவு மட்ட பரீட்சை ஆரம்ப மற்றும் கஷ் உயர்நிலைப் பாடசாலைகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் பெனீஸ் (Benesse) கல்வி ஆய்வு மற்றும் அபிவிருத்தி (Benesse Educational Research and Development) நிறுவனம் நாடளாவிய ரீதியில் பிள்ளைகளில் ஒரு அளலை ஆய்வினை நடத்தியது. அவர்களுடைய பரீட்சை பெறுபேறுகள் மற்றும் ஆய்வு முடிவுகளின் படி கல்லி அமைச்சு சில மாற்றங்களுக்கு கட்டளையிட்டது.

பாடத்திற்கான மொத்த நேரமும் அதிகரிக்கப்பட்டது. ஆங்கிலமொழிச் பாடங்கள் உள்ளடக்கும் விடயப் பரப்புக்களும் செயற்பாடுகள் தொடக்கநிலைப் பள்ளிகளில் அதிகரிக்கப்பட்டதுடன் ஒழுக்க மதிப்புகளுக்கான அறிவுறுத்ததல்களும் அறிமுகப்படுத்தப்பட்டது. ஐப்பானிய அரசு ஒவ்வொரு தனிமனிதனதும் தேவைகளுக்கும் வளைந்து கொடுக்கும் வகையில் கல்விக் கொள்கையை மாற்ற வேண்டுமென எதிர்பார்த்தது. பிள்மைகளுக்கு பொருத்தமான பலதிறப்பட்ட மனப்பாங்குகளையும் பல்வகைப்பட்ட திறன்களையும் வளிப்பதற்கு உதவும் வகையில் தரமான அறிவுரைப்பு ஆவணங்களை உருவாக்க வேண்டுமென முடிவு எடுத்தது. ஒரு புதிய கலைத்திட்டம் 2009 ஆம் ஆண்டில் தொடக்கநிலைப் பள்ளிகளிலும் 2012 ஆம் ஆண்டில் கீழ்ப்பட்ட பாடசாலைகளிலும் நடைமுறைப்படுத்தப்படும்.

கல்வித்தொழிநுட்பத்தின் பயன்பாடு

கல்வித்தொழில்நுட்பப் பிரயோகம் என்னும் துறையைப் பொறுத்தவரையில் ஜப்பான் இலங்கையில் இருந்து பெரிதும் வேறுபடுகின்றது. 1980இல் அமுலான “போதனைத் துணைகள், உபகரணங்கள் வழங்கல், ஏற்பாட்டின் தரக்கட்டுப்பாடு” என்னும் சட்டத்தின் நிபந்தனைக்கு இணங்க தொடக்க நிலைப்பள்ளிகளுக்கு 367 உருப்படிகளும் விநியோகித்தல் தவிர்க்கமுடியாத கடப்பாடாகும். விஞ்ஞானக்கல்வி விருத்தி பற்றிய சட்டம் விஞ்ஞாளம் கணிதம் என்னும் பாடங்களுக்குரிய போதனைத் துணைகள் உபகரணங்களின் தரக்கட்டுப்பாட்டைத் தீரமாவிக்கின்றது. இந்த உருப்படிகளின் செலவீனத்திற் பாதித்தொகையை மத்திய அரசு ஏற்க எஞ்சிய தொகையை உள்ளுராட்சி மன்றங்கள் ஏற்கும். இதே போன்ற ஒரு நுட்பம் இப்பாடசாலைகளின் போதனைத்துறைகள் உபகரணங்களின் தரக்கட்டுப்பாட்டிலும் கடைப்பிடிக்கப்படுகின்றது. 1980இல் 97% வீத விழுக்காட்டினராகிய அனைத்து மட்ட அனைத்துப் பாடசாலைகளிலும் நழுவிய படக்காட்சிப் பொறிகள் இருந்தன. 77% விழுக்காட்டினராகிய பாடசாலைகளில் ஒலி இயக்கச் சுருள் படக்காட்சிப் பொறிகள் இருந்தன. 98% வீதப் பாடசாலைகளிலே தலைமேல் படக்காட்சிப் பொறிகள் இருந்தன. 90% வீதப்பாடசாலைகளிலே கணவிகளும் அதாவது கம்பியூட்டர்களும், வர்ணத்தொலைக்காட்சிக் கருவிகளும் வைத்திருந்தன. பெரும்பாலான பாடசாலைகளிலே மொழிஆய்வுகூடங்கள், ஒலிஒளிப் பேழைப் பதிவுப்பொறிகள், துலங்கல் பகுப்பாய்வுக் கருவிகள், கணளி துணைப்போதனை வசதிகள் என்பன அமைந்திருந்தன.

நீனிடகாலமாக ஜப்பானிய பாடசாலை வகுப்பறைகளில் ஆசிரியரும் பாடப்புத்தமும் என்ற இரண்டு “Ts” (teachers and test books) என்ற கற்பித்தல் ஒழுங்கு முக்கியமான ஒன்றாக இருந்தது. மூன்றாவது “T” (television) தொலைக்காட்சி ஆனது கல்வி தொடர்பான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்ட பொழுது அறிமுகம் செய்யப்பட்டது. 1970 களின் இறுதிக் காலத்தில் கணினி முறை வகுப்பறைகளுக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஒவ்வொரு மாணவர்களும் கணினியுடன் மேற்கொள்ளும் தொடர்பினால் புதிய கற்றல் பாங்கு ஒன்று உருவாகியது. இந்தப் புதிய அணுகுமுறை கற்றலில் தனிநபர் கற்றல், தானாகவே சுயமாகக் கற்றலுடன் இருவழி தொடர்பிலான கற்றல் போன்ற பல வகைப்பட்ட இயல்புகளை உருவாக்கியது. கல்வியில் கணிணியைப் பாவித்த வரலாற்றினை நான்கு காலப் பிரிவுகளாக வகுக்கலாம்.

(1) 1970 ஆம் ஆண்டு இருந்து 1980 ஆண்டுகளின் நடுப்பகுதிவரை கணிணி உதவியுடனான அறிவுறுத்தல் (computer Aided Instruction (CAL) காலம்

தனிநபர் மயப்படுத்தப்பட்ட கல்வி முக்கியமானதாகத் தோன்றியதுடன் கணினி உதவியுடனான அறிவுறுத்தல்கள் கணிதம், ஆங்கிலம் விஞ்ஞானப் பாடங்களில் பயன்படுத்தப்பட்டது.

(i) 1980 களில் இருந்து 1990 களின் முற்பகுதி வரை

கணிணிகள் 93 கருவியாக சுற்றலிலும் கருத்து தெரிவித்தலிலும் பயன்படுத்தப்பட்டகாலம் வரைபடம் தகவல் சேகரிப்பு தயார் செய்தல், எழுத்தும் செயன்முறை (word processing) மற்றும் எடுத்துரைப்புகளுக்கும் கணிணிகள் பயன்படுத்தப்பட்டன

(iii) 1990 களில்

கல்வியில் பல்லூடகங்களின் காலம் 1990 களின் நடுப்பகுதியில் இருவட்டுடனான இடைத்தொடர்புள்ள கற்றல் ஐப்பான் முழுவதிலும் பரவியது. பல்லாடகப் பாவனை கலந்த ஒரு அணுகுமுறை முக்கிய இடத்ததைப் பெற்றது. ஆசிரியர்கள் பலவகைப்பட்ட கல்வியியல் சாதனங்களை அதாவது இருவட்டு (CD- Rom) கல்வியில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பாடப்புத்தகங்கள் மற்றும் முப்பரிமாண சாதனங்கள் என்பவற்றை தெரிவுசெய்யக்கூடியதாக இருந்தது.

(iv) 1990 களின் பிற்காலம்

நகவல்களை தேடுதல் மற்றும் பாடசாலைகளுக்கு இடையிலான மற்றும் சர்வதேச பரிமாறல்கள் என்பவற்றில் வலைப்பின்னலை பயன்படுத்தும் காலம்.

100 பாடசாலைகள் செயற்றிட்டம் 1995இல் அறிமுகம் செய்யப்பட்டது. இது 1997இல் புதிய 100 பாடசாலைகள் செயற்றிட்டம்’என தொடர்ந்து பிளிபற்றப்பட்டது. மின்அஞ்சல் (Email), உலக வலைப்பின்னல்(www), தொலைபேசி வலையமைப்பு(TEL NET) மற்றும் வீடியோ மகாநுட்டு முறைகள் (video conference syillem) என் பாடசாலைகளில் அறிமுகம் செய்யப்பட்டன.

(v) தற்காலமும் எதிர்காலமும்

தேசிய கலைத்திட்ட சீர்திருத்தம் தகவல் தொழில்நுட்பக் கல்வியின் காலப் பகுதியாகும். தெரிவுப் பாடமாக இருந்த தகவல் தொழில்நுட்பம் 2002 இல் கட்டாய பாடமாக மாற்றப்பட்டது.

கல்வி அமைச்சு, தொடக்கநிலைப் பள்ளி, கீழ்மட்ட இடைநிலைப் பள்ளி, மேல்நிலை இடைநிலைப் பள்ளி மற்றும் ஏனைய பாடசாலைகள் எல்லாவற்றிற்கும் வலைப்பின்னல் தொடர்பினை மேற்கொள்ள வேண்டும் என்ற திட்டத்தை உருவாக்கியது

(ஒரு வலைப்பின்னல் மாதிரிப் பிரதேசத்திட்டமொன்று (Network Model Area Plan உருவாக்கப்பட்டு) 30 இடங்களில் உள்ள 1050 பாடசாலைகளுக்கு 1.5 MB Qur (cables) வலைப்பின்னல் அமைப்பினை உருவாக்கும் திட்டத்துடன் ஒரு வலைப்பின்னல் மாதிரிப் பிரதேசத் திட்டமொன்று உருவாக்கப்பட்டது. கல்வி அமைச்சின் தகவல் தொழில்நுட்ப வளங்களினூடான நிகழ்ச்சித்திட்டங்களில் ஒரு பரீட்சாத்தமான முறையாக இதனை உருவாக்கியது அவை ‘வலைப்பின்னல் பாடசாலைகள்” (Internet School) என அழைக்கப்பட்டன. சுற்றாடல் கல்லியில் ஆரம்பிக்கப்பட்ட வலைப்பின்னல் பாடசாலைகளுக்கான ஒரு உதாரணம் கீழே தரப்பட்டுள்ளது.

மாணவரின் நெடுச்சாலைகளைச் சுற்றி ஏற்படும் வளிமாசடைதல், நீர் அசுத்தமாதல், அயில மழை மற்றும் ஒலி மாசடைதல் போன்ற சுற்றாடற் பிரச்சினைகள் தொடர்பாக ஒரு ஆய்வுக் கண்டுபிடிப்பினை மேற்கொண்டனர். சேகரிக்கப்பட்ட தரவுகள் அதிகளவில் அவர்களுடைய செயற்றிட்டத்தின் மற்றும் ஆசிரியர்கள், கல்லூரிகள் மற்றும் அகில திட்டமிடல் செயலகம் என்பனவற்றின் கணிணிகளுக்கு அனுப்பப்பட்டன. தரவுகள் ஒழுங்காக்கப்பட்டு ஒப்புநோக்கப்பட்டதோடு முடிவுகள் ஒவ்வொரு பாடசாலைகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டன.

உயர்கல்வி நிறைகளும் குறைகளும்

பட்டப்படிப்புக் கல்லூரிகள் என்பன இருந்தன. பல்கலைக்கழக முதற்பட்ட நிலைக்கல்வி நிகழ்ச்சி திட்டங்கள் நான்கு தொடக்கம் ஆறு ஆண்டுகள் என் வேறுபட்டு அமையும். மருத்துவத்துறைப் பட்டம் பெறுவதற்குரிய காலம் ஆறு ஆண்டுகள்

பள்னிரண்டு வருட முறைசார் கல்வியைப் பூர்த்திசெய்த மாணவர்கள் பல்கலைக்கழக அறுமதி கோரும் தகுதியுடையவர்கள், இந்த அனுமதி தழைவுத்தேர்வு மேல்மட்ட இடைநிலைப் பாடசாலைகளின் அடைவுகள்/சாதனைகள் என்பவற்றின் அடிப்படையில் வழங்கப்படும். இந்த நுழைவுத்தேர்வு கூட்டு முதல்நிலை அடைவுத் தேர்வு எனப்படும் 1979இல் அறிமுகம் செய்யப்பட்ட இத்தேர்வு மாணவர்களின் பொதுவான, அடிப்படைக் கல்வித்துறை அடைவுகளை புறவய நோக்கில் மதிப்பீடுசெய்ய முயல்கிறது. இது நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் சமகாலத்தில் நடத்தப்படும். பல்வேறு தேசிய மாகாணப்பல்கலைக்கழகங்கள் இரண்டாம் நிலை நுழைவுத்தேர்வு ஒன்றை நடத்துகின்றன. நாற்கல்ளிசார் சோதனை. செய்முறைத்திறன் சோதனைகள், நேர்கானால், குறுங்கட்டுரை மற்றும் வேறுபல் அமிசங்கள் சோதனை உறுப்புக்கள் என்பன இத்தேர்வில் அடங்கியுள்ளன. இந்த இருதேர்வுகளின் முடிவுகள் ஏளைய சான்றிதழ்கள் என்பவற்றின் ஆழமான பரிசீலனையின் பின்னர் மாணவர்கள் தெரிவுசெய்யப்படுவார்கள் 1946 தொடக்கம் 露西 நடைமுறைக்கிரமம் தனியார்துறைப் பல்கலைக்கழகங்களிலும் பின்பற்றப்படுகின்றது. சிறப்புக்கல்வி வழங்கும் கற்கை நெறிகள் பல்கலைக்கழகப் பீடந்தோறும் வேறுபடுகின்றன. உதாரணம் சட்டம், இலக்கியம்,பொருளியல், வணிகம், பொறியியல், வேளாண்மை, விஞ்ஞானம், மருத்துவம், கல்வி என்பன. பட்டப்படிப்புக் கல்லூரிகள் சில பல்கலைக்கழங்களோடு இணைக்கப்பட்டுள்ளன. இவை கோட்பாடுசார். பிரயோகம்சார். விஞ்ஞானத்துறை, கலைத்துறை தொடர்பான ஆழமான ஆய்வுகளில் மாணவர்கள் ஈடுபட்டு அறிவு விருத்தி பண்பாட்டு விருத்தி என்பவற்றில் தங்கள் பங்களிப்பை வழங்குவதை உறுதிப்படுத்தும்நோக்குடன் முனைப்பாகச் செயற்படுகின்றன. கல்வி விஞ்ஞான பண்பாட்டு அமைச்சு உத்தரவிடும் ஒழுங்குவிதிகள் மூலம் பல்கலைகழகங்களில் தரச்சிறப்பு உறுதிப்படுத்தப்படுகிறது. ஒரு பல்கலைக்கழகம் தொழில்நுட்பக் கல்லூரி அல்லது தொழிற்கலை விஞ்ஞானக்கல்வி அமைச்சரின் உடன்பாட்டுடன் மட்டுமே நிறுவப்பட முடியும்.

இப்போது பெரும்பாலான மாணவர்கள் பல்கலைக்கழங்களுக்குப் பதிலாக தொழிற்கல்லூரிகள் அல்லது தொழில்நுட்பக்கல்லூரிகளுக்கே அனுமதிபெற விரும்புவதாகத் தோன்றுகின்றது. மேலும் சனந்தொகை விஞ்ஞானப் போக்குகள் காரணமாகவும் பல்கலைக்கழக நிருவாகிகள் சவால்களை/பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர். 1963-2000 என்னும் காலப்பகுதியில் 18 வயதினர் தொகை 2 மில்லியனில் இருந்து 1.5 மில்லியனாக குறையுமென எதிர்வுகூறப்பட்டுள்ளது. 

அதனால் ஜப்பானியப் பல்கலைக்கழகங்கள் ஒன்றோடொன்று தீவிரமாகப் போட்டியிட்டு “மாணவர உண்வாங்கள்” என்னும் நிலையை அடைந்துள்ளன. பாடசாலை மட்டக்கல்வியோடு ஒப்புநோக்கும்போது ஜப்பானில் பல்கலைக்கழகக்கல்வி தாழ்ந்த மதிப்பைப் பெறுவதாக தோன்றுகின்றது. பல்கலைக்கழக ஆசிரியர்கள் ஆய்வுகட்டு அதிக முக்கியத்துவம் கொடுப்பதால் அவர்கள் போதனைப் பொறுப்புக்களைப் புறக்கணிக்கின்றன என்பது ஜப்பானிய பல்கலைக்கழக கல்வித்துறை மீது கூறப்படும் பிரதான கண்டனமாகும். பெரும்பாலான கற்கைநெறிகள் விரிவுரையாளர்களின் மாணவர்களின் தேவைகளைக் கருத்திற்கொள்ளாமல் தேவைக்குப் பொருத்தமாகவே வகுக்கப்பட்டுள்ளன. வாதிக்கப்படுகின்றது. மானிடவியற்பாடங்கள், சமூகவிஞ்ஞானங்கள் மனவிரிவுக் கலைகள் என்பவற்றின் பல்கலைக்கழகப் பீடங்களிலே இச்சிறப்பம்சம் பெரிதும் வெளிப்படையாகக் காணப்படுகின்றது. புகழ்மதிப்புள்ள தொழிற்துறையினர் வேலை வழங்கப் பட்டதாரியைத் தெரிவுசெய்யும்போது அவர்கள் பெற்ற பட்டத்தைப் பரிசீலிக்காமல் அப்பட்டத்தை வழங்கிய பல்கலைக்கழகத்தின் புகழ்மதிப்பைக் கருத்திற்கொள்வது அச்சிறப்பம்சத்தின் ஒரு காரணமாகலாம். கற்பித்தல் முறைகள் சலிப்பூட்டுவனவாகவும் இறுக்கமானவையாகவும் காணப்படுகின்றன. கற்பித்தர் கடமை மீது அற்ப கவனமே செலுத்தப்படுகின்றது. பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் பணியாளர் விருத்திநிலை இல்லாத முறை காணப்படுகின்றது. கற்பித்தற் கலைத்திட்டம் என்பன பற்றிய ஆய்வு சிறிதானதாகவே நிகழ்ந்துள்ளது.

ஜப்பானியக் கல்வி பற்றி அண்மையில் வெளியான கட்டுரை ஒன்று ஜப்பானியப் பல்கலைக்கழ கல்வியை ஜப்பானின் கல்வி இன்மை” என்று குறிப்பிடுகின்றது. பின்வரும் குறைபாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

* பல்கலைக்கழக வகுப்புகளில் மாணவர்களின் வரவு குறைவு பல்கலைக்கழக ஆசிரியர்கள் வகுப்புகளை அடிக்கடி நடத்தாதுவிடுதல் பெறுபேறுகளை தாமதமாக வருதல் (deliverate) ஜப்பானிய ஆதாரதொடக்கநிலை, இடைநிலைக் கல்வி முறைகள் தொழிற்பயிற்சியுடன் பெற்றுள்ள பிணைப்பு மட்டுமே அந்நாட்டுப் பல்கலைக்கழகக்கல்வியின் வெறுமைக்குரிய இழப்பீடு ஆ விலங்குகின்றது. ஏற்றுக்கொள்ளப்பட்ட தேசிய அரசின் சீர்திருத்தங்கள் தேசிய அரசு ஏற்றுக்கொண்ட பிரதான வழிமுறைகள் பின்வருமாறு.

(i) பாடசாலை நாட்களைக் குறைத்தல்

(ii) பாடசாலைகளின் வகிபங்குகள் சில குடும்பம். சமுதாயம் என்பனவற்றிற்கு மாற்றப்பட்டன.

(i) நெறிகளுக்கு இடையில் தொடர்புபட்ட பிரதான கற்கைகளை அறிமுகம் செய்தமை.

1979 இல் ஜப்பானின் கல்வித்துறைச் சாதனைகளை மதிப்பீடு செய்தல் எஸ்ராவொகெல் என்பவர் “ஜப்பான் முதலிடத்தில்” என்றார் எத்தனையோ பிரச்சினைகள் எதிர்நோக்கிய போது இப்பால கல்விந்துறையில் புரிந்த சாதனைகள் பிரமிப்பு ஊட்டுபவை ஆரும். அனைத்துலக மதிப்பீட்டு ஆய்வுகளில் ஜப்பான் சீராக உச்சநிலையைப் பெற்றுள்ளது. சிறப்பாக விஞ்ஞானத்திலும் கணிதத்திலும் அது உச்சநிலையை எட்டியுள்ளது. (கல்லிக்கான தேசிய ஆணைக்குழு-1993 ஜப்பானிலுள்ள மாணவர்களில் 99% கீழ்மட்ட இடைநிலைக்கல்வியைப் பூர்த்திசெய்கின்றனர். ஐக்கிய அமெரிக்க அரசுகளில் தொடர்புடைய இவ்விழுக்காடு 78% சத வீதமாகும் பொருத்தமான வயதுக்குழுவில் 35% ஏதோ ஒரு வகை உயர் கல்வியைப் பெறுகின்றது. அந்நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் வசிக்கும் ஜப்பானியக் குழந்தைகள் பயில்வதற்குத் தேவையான வளமான ஊக்கத்தை தூண்டும் கலைத்திட்ட தொழிற்பாடு காணப்படுகின்றது. ஜப்பான் அனைவருக்கும் சம கல்விபெறும் வாய்ப்பைப் பெரிய அளவில் உறுதிப்படுத்துக்கின்றது. 236 மில்லியன் மக்களு ஐக்கிய அமெரிக்க அரசுகளோடு ஒப்புநோக்கும் போது ஜப்பாவின் சனத்தொகை 120 மில்லியனாக இருப்பினும் ஐக்கிய அமெரிக்க அரசுகள் உருவாக்கும் வழக்கறிஞர்களில் 7/10 வீதத்தினரையும் பொறியியலாளர்களில் உருவாக்குகின்றது. இருமடங்கினரையும் இரட்டிப்புத் தொகையினரையும் ஐப்பாள்

ஆயினும் அண்மைய ஆண்டுகளில் ஜப்பானின் கல்வித்துறையில் சரிவு ஏற்பட்டுள்ளது. கல்விக்கு அர்ப்பணிக்கப்படும் நிதிமூலவளங்கள் பெரும்பாலும் சமநிலையில்/மாற்றமில்லாமல் உள்ளன குழந்தைகள் சனத்தொகையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி பாடசாலைகளின் தொகையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தலாம். இத்தாக்கம் முதலில் தொடக்கநிலை மட்டத்திலும் பின்னர் இடைநிலை உயர்நிலை: மட்டங்களிலும் நிகழலாம். இக்காரணிகள் மாணவர்களின் அளவுமட்டங்களிலும் தாக்கத்தை விளைவித்தே தீரும். கீழ்மட்ட இடைநிலைப் பாடசாலைகளில் காணப்படும் எதிரப்புத்தடை மேல்மட்ட இடைநிலைப் பாடசாலைகளிற் காணப்படும் இடைவிலகள் தேர்வுப்போட்டியின் அழுத்தத்தைத் தாங்கிக்கொள்ள இயலாத குமரப்பருவ இளைஞர்களிடம் காணப்படும் தற்கொலை வீதவிரிவு என்பன “உள்ளத கல்வி” வழங்குவதன் “செலவும் நலன்களும்” என்னும் அச்சத்தை ஜப்பான் மீண்டும் பரிசீலிக்கத் தூண்டியுள்ளன.

நாம் ஜப்பானியக் கல்விமுறையில் இருந்து எவற்றைக் கற்றுக்கொள்ளலாம் என்பது பொருந்தமான கேள்வியேயாகும் மேல்மட்ட இடைநிலைக் கல்வியை பன்முகப்படுத்தும் சாத்தியம், தொழிற்கல்வியை வலுவுடையதாக்குதல் பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களைத் தெரிவு செய்வதற்குரிய நடைமுறைக் கிரமங்கள் என்பன ஜப்பானியக் கல்வி முறையின் குறிப்பிடத்தக்க சில முக்கிய அம்சங்களாகும். மேலும் கல்விக்குப் போதிய மூலவளங்களை வழங்காமையின் ஆபத்துக்கள் பல்கலைக்கழகங்களில் உள்ள போதனைக் கடமைப் புறக்கணிப்பு தரச்சிறப்பை உறுதிப்படுத்துவதிற் கவனக் குறைபாடு என்னும் அமிசங்களை நாம் ஏற்கனவே எமது கல்வி முறையில் எதிர்நோக்கும் கல்வி குறைகளேயாகும். கல்வியின் சில துறைகளைப் புறக்கணித்தல் ஜப்பானின் சக்திக்கு உட்பட்டதேயாகும். ஏனெனில் அதன் ஏனைய துறைகள் வலிமையுடையன

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top