ஐக்கிய அமெரிக்க நாடுகளில் இருமொழிக்கல்வி

ஐக்கிய அமெரிக்க நாடுகளில் இருமொழிக்கல்வி மிகவும் நிலையற்றதொரு நிலையில் உள்ளது.

முதலாவது உலக மகாயுத்தம்வரை ஆங்கிலத்தை தவிர ஏனைய மொழிகளில் கற்பிக்க கணிசமான அளவு இடமிருந்தது. 1963இல் புளோரிடாவில் டேட் (Dade) பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டத்தைத் தற்போதுள்ள இருமொழிக் கல்வியின் தொடக்கம் எனக்கருதலாம், அது போட் நிறுவகத்தின் உதவியுடன் செயற்படுத்தப்பட்டது. கியூபா மற்றும் அமெரிக்க வீடுகளிருந்து வரும் பிள்ளைகளுக்கு இரு மொழிகளாக ஆங்கில, ஸ்பானிய மொழிகள் மூலமாக கற்பிப்பதே அதன் நோக்கமாக இருந்தது. இத்திட்டம் இரு குழுக்களுக்கும் மேலாகச் சிறந்த அனுபவத்தை வழங்கும் ஒன்றாகவே திட்டமிடப்பட்டிருந்தது. எஸ்பானிய மொழியைப் பேசும் குழுவுக்குச் சேதம் ஏற்படுத்தும் ஒரு செயற்றிட்டம் என்ற வகையில் எல்லா இரு மொழிகளிலும் பிள்ளைகளும் தேர்ச்சியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. காலையில் பிள்ளைகள் தாய் மொழியில் கல்வியைப் பெற்றுக்கொனிடதுடன் மாலையில் இரண்டாவது மொழியில் கற்றுக்கொண்டார்கள். பகற்போசன இடைவேளையின் போது திரு குழுக்களும் ஒன்றாகம் கலக்க உற்சாகமூட்டப்பட்டன. சிந்திரம், சங்கீதம், உடற்பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள் ஒன்றாகச் செயற்படுத்தப்பட்டன. பிற்காலத்தில் ஏனைய பிரதேசத்தைச் சேர்ந்த ஏனைய பாடசாலைகளும் அரம்பி. கனிஷ்ட இடைநிலை, உயர் பாடசாலை மட்டங்களில் இத்தகையை இருமொழிக் கல்வி வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன. 1974இல் இருமொழி அடிப்படைக் கல்வியை பெற்ற 3683 மாணவர்களும் இடைநிலை மட்டத்தில் சுமார் 2000 பேரும் இருந்தனர்.

இச்சந்தர்ப்பத்தில் 1968இல் சமஷ்டி அரசு ‘திரு மொழிக் கல்விச் சட்டமூலத்தை” நிறைவேற்றிக் கொண்டது. 1964-70இல் இருமொழிக் கல்வி வேலைத்திட்டத்திற்கு என 7 மில்லியன் டொலருக்கும் அதிகமாக அங்கீகரிந்தது. இந்த வேலைத்திட்டங்கள் 3000 டொலருக்குக் குறைந்த வருமானமுள்ள குடும்பங்களைச் சேர்ந்த ஆங்கிலம் பேசும் திறன் குறைந்த பிள்ளைகள் அதிகமாகவிருக்கும் பாடசாலைகளில் அத்தகைய பிள்ளைகளின் விசேட கல்வித் தேவைகளை நிறைவு செய்வதைக் குறிக்கோளாகக் கொண்டிருந்து 1988 இல் மீண்டும் இச்சட்டம் உயிர்ப்பிக்கப்பட்டது எப்படியிருந்தபோதிலும் ஆரம்பத்திலிருந்தே இருமொழிக்கல்வி என்றால் என்ன என்பது இங்கு குறிப்பிடப்படயில்லை அத்தோடு “சுயமொழி” கல்வி பற்றி எந்தளவிற்கு வலியுறுத்தப்பட வேண்டும் என்பது பற்றியும் பிரச்சினை உருவாகியது. இருமொழி வேலைத்திட்டங்களை உருவாக்க இச்சட்டத்தின் மூலம் இப்பாடசாலைகளுக்குச் சந்தர்ப்பம் அளிக்கப்பட்டாலும் ஒவ்வொரு பாடசாலையும் அவ்வாறு செய்யவேண்டும் என்று சிந்திக்கஏறிறுந்தப்படவில்லை லாவு எதிர் நிக்கொள்ஸ் என்னும் பிரசித்திபெற்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பின பின் இருமொழிக் கல்வி வேலைத்திட்டம் பற்றி உற்சாகம் அதிகரித்தது. உயர் நீதிமன்றம் சீன மொழி பேசும் சிறுபான்மைச் சமூகத்தவருக்கு அவர்களது பாடசாலை முறைமையில் ந கருத்துள்ள விதத்தில் கல்வி வேலைத்திட்டங்ஈடுபடச் சந்தர்ப்பம் கிடைப்பதில்லை அகையால் அந்தப் பிள்ளைகளுக்குக் கிடைக்கும் பலாபலன்கள் ஆங்கில மொழிபேசும் பெரும்பான்மை மக்களுக்குக் கிடைக்கும் பலாபனைகளை விடக் குறைவானதாகும் என்று தீப்பளித்தது. சட்டதிட்டங்களிளால் தடை செய்யப்பட்டிருந்த எல்லா வகையான அவமானப்படுத்தல்களுக்கும் உந்துதல் அளிக்கிறது என்றும் சுறப்பட்டது. இதன் பிரதிபலனாக முதன்முதலாக ஐக்கிய அமெரிக்காவில் ஆங்கிலம் பேசாதவர்களின் மொழி உரிமை, குடியுரிமைகளுள் ஒன்று என ஏற்றுக்கொள்ளப்பட்டது.

லாவு திப்பினாய் இருமொழிக் கல்விச்சட்டத்தினால் வழங்கப்பட்ட சேவை விரிவடைந்தது. பல பிராந்திய அரசுகள் இருமொழிக்கல்வியை விதிக்கின்ற சட்டங்களை நிறைவேற்றின. இச்சட்டத்தின் காராமாக σταρια மட்டத்திலான கொள்கைசார்ந்த வழிகாட்டல் தயாரிக்கப்படுவது நடைபெற்றதோடு அருள்படி ஐக்கிய நாடுகளின் கல்வி அலுவலகத்துக்கு ஒரு பாடசாலை மாவட்டம் குடியியல் உரிமைச் சட்டத்திற்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கின்றதா எனத் தீர்மானிக்க முடிந்தது. “லாவு பரிகாரம்” என்றழைக்கப்பட்ட கவனத்தின் மூலம் ஆங்கிலம் தவிர்ந்த ஏனைய ஆரம்ப அல்லது வீட்டில் பயன்படுத்தப்படுகின்ற ஒரு மொழியையுடைய பிள்ளைகளைத் தேடிக்கொள்ளவும் அவர்களது ஆங்கில மற்றும் தாய்மொழித் தேர்ச்சியை மதிப்பிடவும் பாடசாலை சபைகளுக்கு விதிக்கப்பட்டது. ஆரம்ப பாடசாலைப் பிள்ளைகளுக்கு முழுமையாகவும் தொடர்ந்தும் ஆங்கிலத்தில் கற்க முடியுமாகும் வரை தமது பிரதாள் மொழியில் கற்பிக்க வேண்டியதாயிற்று.

நாம் மேலே குறிப்பிட்ட விடயங்களை கலந்துரையாடலிலிருந்து ஐக்கிய அமெரிக்காவின் சமஷ்டி அரசு “சங்கிராந்தி” இருமொழிக் கல்விக்கு மட்டுமே உறசாக மூட்டியது என்பது தெளிவாகின்றது. அதாவது மாணவர்களும் பாட்சாலை சபைகளும் எந்தளவு ஆங்கிலத் தேர்ச்சி பெற்றுள்ளனவென்று மதிப்பிடப்படும் ஆங்கிலத்தில் மட்டும் சுற்பதை ஆரம்பிக்கக்கூடிய விதத்திலேயே அவ்வாறு செய்யப்படுகின்றது. மாணவனின் தாய்மொழியைப் பாதுகாத்துக்கொள்ள முயற்சிக்கவில்லை. ஆரம்ப் பாடலகளில் அளரவாசிக்கும் மேலானவர்கள் தாய்மொழியில் எந்தப்பாடத்தையும் கற்களில்லை. ஐக்கிய அமெரிக்காவில் இருமொழிக் கல்விபற்றி பெரும்பாலானவர்கள் சாதகமான மளப்பாங்கைக் கொண்டவர்கள் அல்லர் அவர்கள் இருமொழிக் கல்வியினால் எஞ்சியிருக்காத ஒரு மொழியைப் பாதுகாத்தல் மூலம் ஆங்கிலம் அல்லாத ஒரு கலரசாரத்தைப் பாதுகாக்க முயற்சிக்கப்படுகிறது என நினைக்கிறார்கள். வேறு ஒரு மொழியை அனுமதிப்பதன் மூலம் பிரதான மக்கள் வாழ்க்கைக்கு மாறான ஒரு கண்ணோட்டத்தைச் சட்டரீதியாக்கும் ஒரு நடவடிக்கை இருமொழிக்கல்வியினால் நிகழுகின்றதென்றும், அதனால் அம்மொழியினால் அடையாளம் காணப்படும் கலாசாரப் பெறுமானமும் ஏற்கப்படலாம் என்றும் சிந்திக்கும் மக்கள் இருமொழிக்கல்வி சமூகத்தில் பெரும்பான்மைக் குழுவினருக்கு ஓர் அச்சுறுத்தல் எவக் கருதுகின்றனர்.

கலிபோர்னியாவிலும் மற்றும் பிராந்திய அரசுகளிலும் பரேங்கமான இடங்களில் அரங்கில மொழியே அரச மொழியாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்று தீர்மானித்த ஆங்கில மொழிச்சட்டம் பின்மொழியைப் பயன்படுத்துவதற்கான எதிர்ப்பை எடுத்துக்காட்டும் ஒரு சாட்சியமாகும். 1983 இ இருமொழிக் கல்விக்காக ஆக்கப்பட்டிருந்த சமஷ்டி உதவியைக் குறைக்கவும், ஓரளவு ஆங்கிலத் நேர்ச்சியுள்ள பிள்ளைகளுக்கு கற்பிக்கப் பாடசாலைச் சபைகள் செயற்படுத்திய நிவாரண வேலைகள் சம்பந்தமான விதிகளை இலகுபடுத்தவும் ஜனாதிபதி ரேகன் தீர்மானித்தார்.

கொங்கிரசின் முன்னிலையில் சாட்சியமளித்த இருமொழிக் கல்விக்கான தேசிய சங்கம் இரு மொழிக்கல்வியினால் ஏற்படும் பலன் மிகவும் விரிவானதென்றும் பிள்ளைகளின் பரீட்சைப் புள்ளிகள். சுயதிறன், சமுதாயத்துடனான இயைபாக்கம் ஆகிய துறைகளில் ஏற்பட்ட முன்னேற்றத்தினூடாக இந்நிலைமை தெளிவாகின்றது என்றும் விவாதித்தனர். இயற்கை வளங்களுள் ஒன்றாக ஆங்கிலம் தவிர்ந்த ஏனைய மொழிகளின் பெறுமதியை வலியுறுத்திய அவர்கள் இவ்வளத்தை விருத்தி செய்வதும் விரிவடையச் செய்வதும் அவசியம் என்றும் எடுத்துக் காட்டினர்.

பெரும்பாலான அமெரிக்கர்கள் இருமொழிவாதம் என்பது கற்பதால் பெற்றுக்கொண்ட ஓர் அடைவு எனக் கருதுவது இங்கு முக்கியமாகும். பெரும்பாலும் அது அண்மையில் இடம்பெயர்ந்ததினால் ஏற்பட்ட ஒரு பழுதடைந்த இலட்சணம் எனத் தென்பட்டது. இருமொழிக் கல்வி இனவாதம், வறுமை, சேதம் என்பவற்றை விளைவிக்கக் கூடிய கல்விக்குச் சமமான ஒன்றெனக் காட்டப்பட்டது. எனினும் பிராதான பாடசாலைகளில் வெளிநாட்டு மொழிகள் என்ற வகையில் உலகின் பிரதான மொழிகளைக் கற்பது பொருளாதார ரீதியிலும், கலாசார ரீதியிலும் மதிக்கப்பட வேண்டும் என்று

ஐய்யே அமெரிக்காவின் சிறுபான்மைச் சமூகத்தவரின் பிள்ளைகளுக்கு குறைவான கல்வியை வழங்குகின்ற விடயம் பற்றி பெடில்லா (1990) கவலை தெரிவித்தார். அடுத்த நூற்றாண்டு அரும்போது ஹிஸ்பானியர்கள் (எஸ்பானிய மொழி பேசுவோர்கள்) முழுசனத் தொகையில் 30% ஆகும் என்று எடுத்துக்காட்டப்படுகின்றது. இவர் இருமொழிக்கல்வி என்பது மாணவர்களுக்கும் கொடுக்கப்பட வேண்டிய ஓர் உபாயமாகுமே அன்றி பாதகமான நிலைமையில் சிறுபான்மைச் சமூகத்தவருக்கு வழங்கப்படும் விசேட ஆலோசனை வழங்கும் வேலைத்திட்டமொன்றாக இருக்கமாட்டாது என அவர் விவாதிக்கிறார்.

ஐக்கிய அமெரிக்காவின் மொழிக்கொள்கையில் காலத்தோடு தோன்றும் பிரதான அம்சத்தை உங்களால் அறிந்து கொள்ள முடியுமா? அந்தந்த முழுத்தேசியத்திற்கும் முன்னால் உள்ஸ சவால்களைச் சிறுபான்மைச் சமூகத்துக்கும் சரியாகப் புரிந்துகொள்ளாது மொழிக்கொள்கை ஒருமொழிக் கொள்கைக்கும். இருமொழிக்கொள்கைக்கும் இடையில் ஊசலாடிக்கொண்டிருக்கிறது என்ற கருத்தோடு உடன்பாடு காண்கிறீரா?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top